நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி முதுநிலை மேலாண்மையியல் துறை சார்பில் சர்வதேச மாநாடு, செயலாளர் இக்னேசியஸ் மேரி தலைமையில் நடந்தது.
துறைத் தலைவர் ஆஷா வரவேற்றார். ஓமன் பல்கலை பேராசிரியர் காபலி சுப்பிரமணியன் மாநாட்டு மின் புத்தகத்தை வெளியிட்டார். இலங்கை பல்கலை பேராசிரியர் ஜஹிலால், மதுரை தொழிலதிபர் மகேந்திரவேல் உள்ளிட்டோர் பேசினர். துணை முதல்வர் பிந்து ஆண்டனி சிறந்த கட்டுரைகளுக்கான விருதுகளை வழங்கினார். உதவிப் பேராசிரியை சுகன்யா நன்றி கூறினார்.

