நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி முதுநிலை, ஆராய்ச்சி இயற்பியல் துறை சார்பில் சர்வதேச 'ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ்' என்ற தலைப்பில் சர்வசேத மாநாடு நடந்தது.
துறைத் தலைவர் லீனா சந்திரா வரவேற்றார். இணைப் பேராசிரியை அருள் மேரி துவக்கி வைத்து பேசினார். செயலாளர் இக்னேஷியஸ் மேரி ஆய்வாளர்களின் கட்டுரைகள் அடங்கிய நுாலை வெளியிட்டார். அமெரிக்க நிறுவன அதிகாரி கிருஷ்ணகுமார், பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., பேராசிரியர் மரின்மோய் ஜப்பான் பேராசிரியர் அருண்குமார் துரை, சிக்ரி நிறுவன பேராசிரியர் சுப்பையா பேசினர். நிறைவு விழாவில் துணை முதல்வர் பிந்து ஆண்டனி பேசினார். இணைப் பேராசிரியை ஜெயாஷீலா நன்றி கூறினார்.

