sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காணாமல் போனவர் பற்றிய புகாரில் 24 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை

/

காணாமல் போனவர் பற்றிய புகாரில் 24 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை

காணாமல் போனவர் பற்றிய புகாரில் 24 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை

காணாமல் போனவர் பற்றிய புகாரில் 24 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை


ADDED : நவ 05, 2024 05:28 AM

Google News

ADDED : நவ 05, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரத்தை காவல் துறை தெரிவித்தாலும், அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும், காவல் நிலையங்களில் தரப்படும் புகார்கள் மீது, போலீசார் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், டி.ஜி.பி., பிறப்பித்துள்ள உத்தரவு:

காணாமல் போனவர்கள் குறித்து புகார் கிடைத்த உடன், விசாரணையில் ஈடுபட வேண்டும்.

அவர்களின் புகைப்படங்கள், உறவினர்கள் மற்றும் விசாரணை அதிகாரியின் தொடர்பு எண்களுடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல் நிலையங்களின் பலகையில் தெரியும்படி ஒட்ட வேண்டும்.

புகார் அளித்த நபர்களின் ஒத்துழைப்புடன், காணாமல் போன நபர்கள் அடிக்கடி சென்று வரும் இடங்கள், பஸ், ரயில், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தேடுதலில் ஈடுபட வேண்டும். புகார் மீது, உடனடியாக சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கி, 24 மணி நேரத்தில் விசாரித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் புகார்கள் மீது அலட்சியம் கூடாது.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us