sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.பி.எஸ்., நியமிச்சாச்சு... ; நீதிமன்றம் உத்தரவால் சூடுபிடிக்குது விசாரணை

/

மதுரை மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.பி.எஸ்., நியமிச்சாச்சு... ; நீதிமன்றம் உத்தரவால் சூடுபிடிக்குது விசாரணை

மதுரை மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.பி.எஸ்., நியமிச்சாச்சு... ; நீதிமன்றம் உத்தரவால் சூடுபிடிக்குது விசாரணை

மதுரை மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.பி.எஸ்., நியமிச்சாச்சு... ; நீதிமன்றம் உத்தரவால் சூடுபிடிக்குது விசாரணை


ADDED : ஜூலை 23, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை,: மதுரை மாநகராட்சியில் விதிமீறி சொத்து வரி நிர்ணயம் செய்து ரூ.பல கோடி முறைகேடு செய்த புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு 2023, 20204 ல் விதிமீறி சொத்துவரி நிர்ணயம் செய்தது தொடர்பான புகாரில் மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி வரியை குறைத்தது தெரியவந்தது. மத்திய குற்றப் பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் விசாரணை நடக்கிறது. இதுவரை மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 தி.மு.க., மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில் கலெக்டர்கள் உட்பட 16 பேரை மாநகராட்சி 'சஸ்பெண்ட்' செய்தது. மேலும் 55 பேருக்கு இம்முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக போலீசார் பட்டியல் தயாரித்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் மாநில அரசு விசாரித்தால் உண்மை நிலவரம் வெளிவராது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், 'சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மாநகராட்சி முறைகேடு விசாரணை மேலும் சூடுபிடிக்க உள்ளது.

7 கவுன்சிலர்களுக்கு சிக்கல்

இம்முறைகேட்டில் ஆவணங்கள் ரீதியாக அதிக எண்ணிக்கையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க அலுவலர்களுக்கு சிபாரிசு செய்ததன் அடிப்படையில் 7 தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக ஒரு ஆண், 2 பெண் கவுன்சிலர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவுள்ளனர். சில கணினி ஆபரேட்டர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது முதலில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தும் திட்டமும் தனிப்படைக்கு உள்ளது. இதனால் கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.








      Dinamalar
      Follow us