நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் இன்டெர்ன்ஷிப் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் தேவிகா வரவேற்றார். கே.பி.எஸ். இன்போடெக் நிர்வாக இயக்குனர் முரளிதரன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் பாலபிரியா நன்றி கூறினார்.