sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுவாலைக்கு மதியம் வரை மட்டுமே பஸ்; டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணிக்கும் பரிதாபம்

/

சிறுவாலைக்கு மதியம் வரை மட்டுமே பஸ்; டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணிக்கும் பரிதாபம்

சிறுவாலைக்கு மதியம் வரை மட்டுமே பஸ்; டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணிக்கும் பரிதாபம்

சிறுவாலைக்கு மதியம் வரை மட்டுமே பஸ்; டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணிக்கும் பரிதாபம்


ADDED : பிப் 02, 2025 03:58 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார் : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிறுவாலைக்கு இயக்கப்படும் பஸ் மதியத்திற்கு மேல் இரவு வரை இயக்கப்படாததால் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இக்கிராமத்திற்கு காலை முதல் இரவு வரை இயக்கப்படும் அரசு பஸ்களால் பள்ளி கல்லுாரி மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.

கொரோனாவிற்கு பின் எல்லீஸ் நகர் பணிமனை பஸ் மதியம் 1:50 முதல் இரவு 9:20 வரை 5 நடைகளை 'கட்' செய்துள்ளனர்.

புகார் செய்தால் அடுத்த ஓரிரு நாட்கள் மட்டுமே பஸ் வரும். டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை என்றனர்.

தற்போது பயணிகள் குறைவு என அதிகாரிகள் புகாரை திருப்புவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிள்ளையார் நத்தம் சண்முகநாதன்: குமாரம் பிரிவிலிருந்து சிறுவாலை வரை 7 கிராமங்கள், 3 கிராம பிரிவுகள் உள்ளன.

பஸ் வசதியின்றி தினமும் சிரமப்படுகிறோம். இரவில் ேஷர் ஆட்டோ வசதி கூட இல்லை. மதுரை நகர் கடைகளில் இரவு 9:00 மணிக்கு தான் வேலை முடியும்.

இரவு பஸ் இல்லாததால் குமாரம் பிரிவில் இருந்து டூவீலரில் 'லிப்ட்' கேட்டு செல்லும் போது விபத்தும் நடக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us