ADDED : பிப் 26, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : செல்லம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் ராஜா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாநில அமைப்புச் செயலாளர் மகேந்திரன், ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வாலாந்துார் ஊராட்சித் தலைவர் கணபதி, உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, நிர்வாகிகள் ரகு, பவுன்ராஜா, மகேந்திரபாண்டி, சசிக்குமார் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ''பழனிச்சாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் தோற்றுப் போய் விட்டனர். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.

