sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒருபோன் போதுமே

/

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே


ADDED : செப் 03, 2025 05:42 AM

Google News

ADDED : செப் 03, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் குடிநீர்

மதுரை பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் கழிவு நீருடன் கலந்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக் கேடு உண்டாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இளங்கோவன், பைபாஸ் ரோடு.

திறந்தநிலையில் வடிகால்

மதுரை மகால் ரோட்டில் மழைநீர் வடிகால் துார்வாருவதற்காக தோண்டியபோது, குடிநீர் இணைப்புகள் சேதமாகி விட்டன. துார்வாரும் பணிகள் பாதியில் நிற்பதால், ஏழு அடி ஆழத்திற்கு பள்ளம் திறந்த வெளியில் உள்ளது. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வினோத், மகால் ரோடு .

சுகாதாரக்கேடான கால்வாய்

எல்லீஸ் நகர் குடும்பக்கட்டுப்பாடு அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் மாநகராட்சி, தனியார் கழிவுநீர் வாகனங்கள் கழிவை கொட்டுகின்றன. அருகில் உள்ள குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு உண்டாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பூமிநாதன், எல்லீஸ் நகர்.

மோசமான ரோடு

மதுரை முனிச்சாலை முதல் அனுப்பானடி வளைவு வரை 2 கி.மீ. துாரத்திற்கு ரோடு மிக மோசமாக உள்ளது. மழை நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நீலகண்டன், கீழவாசல்.

மூடப்படாத பள்ளம்

மதுரை அவனியாபுரம் காவேரி தெருவில் யாரும் செல்ல முடியாத வகையில் தோண்டிய பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், அவனியாபுரம்.

கொசு உற்பத்தி கால்வாய்

தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெரு அருகிலுள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அருகில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாகசுப்பிரமணியன், மருதுபாண்டியர் தெரு.

தேங்கும் கழிவுநீர்

மதுரை நடராஜ் நகர், எடிசன் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் கவனிப்பார்களா.

- செண்பகவேல், நடராஜ் நகர்.

கோயிலைச் சுற்றி குப்பை

மதுரை கூடலழகர் கோயிலைச் சுற்றி குப்பை நிறைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லெட்சுமணன் மணி, எஸ்.எஸ்.காலனி.






      Dinamalar
      Follow us