ADDED : மார் 24, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் 4 கி.மீ., நடந்து சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிறகு பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இத் திருவிழாவில் கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.