/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோலைமலையில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்
/
சோலைமலையில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்
சோலைமலையில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்
சோலைமலையில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்
ADDED : அக் 12, 2025 04:18 AM
அழகர்கோவில் : அழகர்கோவில் சோலைமலையில் 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா அக். 22ல் துவங்குகிறது. அக். 27ல் சூரசம்ஹாரம், அக். 28ல் திருக்கல்யாண நடக்கிறது.
இந்தாண்டுக்கான விழா, அக். 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்று காலை 7:00 மணி முதலே பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர். அக். 26 வரை தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகள், காலை 10:00 மணிக்கு சண்முகார்ச்சணை, காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தினமும் மாலை 4:00 மணிக்கு அறுபடை வீடுகளை குறிக்கும் வகையில் சந்தன அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.
சூரசம்ஹாரம் விழாவின் 6ம் நாளான அக். 27 மாலை 4:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வேல் வாங்கும் வைபவம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, கோயிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரணை, அக்னி திக்கில் சிங்கமுகா சூரணை, தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மா சூரணைசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகம் செய்யப்பட்டுதீபாராதனை நடக்கிறது. பின் அவ்வைக்கு நாவல் கனி கொடுக்கும்சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
அக். 28 காலை 10:45 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு நித்திய உற்ஸவருக்கு மஹா அபிஷேகம், அன்னப்பாவாடை தரிசனத்துடன் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்று மாலை அறுபடை வீடு முருகன் அலங்கார தரிசனமும், மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவுபெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், அறங்காவலர்கள், கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் செய்து வருகின்றனர்.