ADDED : அக் 12, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வண்டியூர், சவுராஷ்டிராபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கஞ்சா போதையில் 10 பேர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடைகளை சேதப்படுத்தினர். மக்களை மிரட்டியதோடு, ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர், கார்களை சேதப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், போலீஸ் விசாரணையில் தப்பி ஓடியபோது கால்வாயில் இறந்த தினேஷ்குமாரின் நண்பர்கள் எனத்தெரிந்தது.
இதுதொடர்பாக அப்பகுதி ஹம்சாத் ஹுசைன் 22, மருதுபாண்டி 24, லட்சுமணன் 22, அருண் 22, ஆகியோரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
6 பேரை தேடி வருகின்றனர்.