sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாதியில் நிறுத்தப்பட்ட கரடிக்கல் ஜல்லிக்கட்டு

/

பாதியில் நிறுத்தப்பட்ட கரடிக்கல் ஜல்லிக்கட்டு

பாதியில் நிறுத்தப்பட்ட கரடிக்கல் ஜல்லிக்கட்டு

பாதியில் நிறுத்தப்பட்ட கரடிக்கல் ஜல்லிக்கட்டு


ADDED : மே 05, 2025 05:40 AM

Google News

ADDED : மே 05, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் கரடிக்கல்லில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் குளறுபடிகள் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

கரடிக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1070 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். காலை 8:00 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ., சிவஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவக் குழு பரிசோதனை மெதுவாக நடந்ததால் மாடுகளை அவிழ்த்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது. காளைகளுக்கு வழங்கிய டோக்கன் வரிசைப்படியே காளைகளை அவிழ்த்து விட வேண்டும் என சிலர் தெரிவித்ததால் மாடுகள் வாடி வாசலுக்கு வந்து சேர்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

பதிவு செய்யப்படாத, பரிசோதனை செய்யப்படாத காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. 446 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் ஆர்.டி.ஓ., சிவஜோதி மதியம் 3:00 மணிக்கு போட்டியை நிறுத்த உத்தரவிட்டார். அதிருப்தி அடைந்த மாடுகளின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் காளைகளை பொது வெளியில் அவிழ்த்து விட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். காலை முதல் நடந்த நிகழ்ச்சியில் மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நாகமலை புதுக்கோட்டை எஸ்.எஸ்.ஐ., ஆனந்தன் மீது மாடு முட்டியதில் காயம் அடைந்தார். அவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us