/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் அனுமதி
/
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் அனுமதி
ADDED : ஏப் 11, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உசிலம்பட்டி அருகே எம்.கீழப்பட்டி சுரேஷ். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கீழப்பட்டியில் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஏப்.29ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, போலீசார் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கலெக்டர், எஸ்.பி., விக்கிரமங்கலம் போலீசாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: நிபந்தனைகளுக்குட்பட்டு போட்டி நடந்த போலீசார் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.