/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 12, 2025 04:40 AM
மதுரை : உசிலம்பட்டி அருகே அய்யம்பட்டி சிவநாத் பாபு. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அய்யம்பட்டியில் ஒரு கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி பிப்.23ல் கிடாமுட்டு நடைபெற உள்ளது. இதை வணிக நோக்கில் நடத்தவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போட்டி நிறுத்தப்படும். அனுமதி, பாதுகாப்பு அளிக்கக் கோரி கலெக்டர், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.,சிந்துபட்டி போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.