நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் கூடாரவல்லி விழா நடந்தது. பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு, தொண்டரடி பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி, ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, பாரதியின் பாரத மாதாவின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை பஜனை குழுவினர் பாடினர்.
செயலர் சுவாமி வேதானந்த, முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். குலபதி அத்யாத்மனந்த கூடாரவல்லி பேசினார். காயத்ரி ஜெபம், மங்கள ஆரத்தியை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.