sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உசிலம்பட்டியில் கும்பாபிஷேகம்

/

உசிலம்பட்டியில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டியில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டியில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 08, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நாலுகரைபுத்துாரில் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.சுவாமி போர் கோலத்தில் காலில் தண்டை, பாதரட்சை, இடுப்பில் கத்தி அணிந்து காட்சியளிக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து, 19 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி ஜூலை 5 ல், கணபதி ஹோமத்துடன் துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5:50 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளுக்குப்பின் காலை 9:00 மணிக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், தீபாரதனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மந்தையம்மன் கோயில்


நல்லுத்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 6ல், கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் பால்குடம் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை 10:00 மணிக்கு மேல் புனிதநீரால் கோபுர கலசங்களில் அபிஷகேம் செய்தனர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடரந்து அன்னதானமும் நடந்தது.






      Dinamalar
      Follow us