/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து உபகோயில்களில் நாளை கும்பாபிஷேகம்
/
குன்றத்து உபகோயில்களில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 15, 2025 06:40 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், குருநாத சுவாமி அங்காள பரமேஸ்வரி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கு நாளை(ஏப்.,16) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான யாகசாலை பூஜை நேற்று துவங்கியது.
புனித நீரால் வன்னி மர விநாயகருக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது.
பழநி ஆண்டவர் கோயிலில் நேற்று காலையில் பூர்வாங்க பூஜை, தீபாராதனை நடந்தது. இரண்டு கோயில்களிலும் நேற்று மாலை மூலவர்களின் சக்தி புனித நீர் குடங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்ம தேவன் கலந்து கொண்டனர்.
குருநாத சுவாமி அங்காள பரமேஸ்வரி கோயில், பாம்பலம்மன் கோயிலில் இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.