ADDED : செப் 01, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷே கம் செப்.,17 ல் நடப்பதை முன்னிட்டு, மாநகராட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து கமிஷனர் கவுரவ் குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
குடிநீர், கழிப்பறை வசதிகள், ரோடுகள் சீரமைப்பு, வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு, தெரு விளக்குகள் சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. துணை கமிஷனர்கள் ராஜாராம், ஜெய்னுலாபுதீன், டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
