ADDED : செப் 01, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆவின் அலுவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பொது மேலாளர் முத்துமாதவன் தலைமையில் நடந்தது.
பொது மேலாளர் முதல் ஊழியர் வரை 92 பேர் பரிசோதனைகள் செய்துகொண்டனர். கே.ஆர்.எஸ். கியூர் லைப் மருத்துவமனை குழு பரிசோதனை மேற்கொண்டது. இம்முகாமில் 45 அலுவலர்கள் உடல் உறுப்புதானம் செய்தனர். இதற்கான ஒப்பந்தம், அரசு மருத்துவமனை உடல் உறுப்புகள் தானம் ஒருங்கிணைப்பாளர் திலிப்குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
திலிப்குமார் கூறுகையில், ஒருவர் 8 உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும். அரசுசார் அலுவலகத்தில் ஆவினில் அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் ஒரேநாளில் உடல் உறுப்பு தானம் செய்தது இதுவே முதன்முறை என்றார்.
