/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூங்காவில் சுகாதார நிலையம் தடை கோரி வழக்கு
/
பூங்காவில் சுகாதார நிலையம் தடை கோரி வழக்கு
ADDED : ஜன 13, 2024 03:59 AM
மதுரை : மதுரை பைபாஸ் ரோடு வேல்முருகன் நகர் ஜெயலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
வேல்முருகன் நகரில் பூங்கா உள்ளது. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம்அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் விதிமீறல் உள்ளது.
கலெக்டர், மாநகராட்சிகமிஷனருக்கு மனு அனுப்பினோம். சுகாதார நிலைய கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு: கட்டுமானம் எதுவும் மேற்கொள்ளப்படாது. அது பூங்காவிற்குரிய இடமாக இருக்கும்பட்சத்தில்மாற்று இடம் தேர்வு செய்யப்படும். விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மாநகராட்சி கமிஷனர் ஜன.,22ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.