
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி - ஆண்டிபட்டி ரோட்டில் உள்ள கணவாய் வேளாங்கண்ணி சர்ச்சில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு, தவக்கால திருப்பயணம் மற்றும் நற்கருணை ஆராதனை நடந்தது.
சிலுவையை ஏந்தி இயேசுவினுடைய பாடுகளை தியானித்தனர். தேனி மறைவட்ட அதிபர் முத்து தலைமையில் திருப்பலி நடந்தது.
கருமாத்துார் குருமட அதிபர் சூசை செல்வராஜ் மறையுரையாற்றினார்.
தேனி மறைவட்ட பங்குதந்தையர், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உசிலம்பட்டி குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை இக்னேசியஸ் ஸ்டாலின் உட்பட பலர் செய்திருந்தனர்.

