/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்கள் செயலிழந்த நிலையில் பயணியரை பாதுகாத்த டிரைவர்
/
கால்கள் செயலிழந்த நிலையில் பயணியரை பாதுகாத்த டிரைவர்
கால்கள் செயலிழந்த நிலையில் பயணியரை பாதுகாத்த டிரைவர்
கால்கள் செயலிழந்த நிலையில் பயணியரை பாதுகாத்த டிரைவர்
ADDED : மார் 17, 2026 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை டிரைவர் சரவணன், 50, ஓட்டி வந்தார். பஸ்சில், 26 பயணியர் இருந்தனர்.
திருமங்கலம், ஆலம்பட்டி தனியார் பள்ளி அருகே பஸ் வந்தபோது, டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது இடது கால் திடீரென செயலிழந்தது. சுதாரித்த சரவணன், பஸ்சை மெதுவாக இயக்கி, ரோட்டின் ஓரத்தில் நிறுத்திய நிலையில், மயங்கி விழுந் தார். இதைப்பார்த்த கண்டக்டர் ரமேஷ் மற்றும் பயணியர், சரவணனை அந்த வழியாக வந்த காரில், திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

