/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் 205 கடைகள் உரிமம் ரத்து: மறுஏலம் விட முடிவு
/
மாநகராட்சியில் 205 கடைகள் உரிமம் ரத்து: மறுஏலம் விட முடிவு
மாநகராட்சியில் 205 கடைகள் உரிமம் ரத்து: மறுஏலம் விட முடிவு
மாநகராட்சியில் 205 கடைகள் உரிமம் ரத்து: மறுஏலம் விட முடிவு
ADDED : டிச 30, 2024 05:16 AM
மதுரை : மதுரை மாநகராட்சிக்கு (மாத உரிமை தொகை) சொந்தமான 205 கடைகளின் உரிமத்தை ரத்து செய்து விரைவில் ஆன்லைன் வழியே மறு ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் பஸ் ஸ்டாண்டுகள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வாகன காப்பகங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகள் குத்தகைக்கு விடப்பட்டன. நீண்டகாலமாக இக்கடைகள் மாத உரிமத் தொகையை மாநகராட்சிக்கு செலுத்தாமல் கடை நடத்துவோர் 'டிமிக்கி' கொடுத்தனர். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இவற்றில் பல கடைகள் உபயோகப்படுத்தாமலும், பராமரிப்பு இன்றியும் கிடப்பில் போடப்பட்டன. அக்கடைகளின் சுவர்கள் உறுதித்தன்மை இழந்து இடியும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுசென்றனர்.
இதையடுத்து வாடகை தராமல், பயன்படுத்தாத கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. வாடகை தராத கடைகளுக்கு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் கீழ் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டன. உரிமம் ரத்து செய்யப்பட்டவை, இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாதவை உட்பட 205 கடைகளுக்கு விரைவில் ஆன்லைன் வழியாக மறுஏலம் நடத்தி வருவாய் ஈட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான டிச.27 ல் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது.

