sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காய்கறி மார்க்கெட் கட்டடம் திறப்பு எப்போது? : மக்கள் வரிப்பணம் ரூ.10 லட்சம் வீண்

/

காய்கறி மார்க்கெட் கட்டடம் திறப்பு எப்போது? : மக்கள் வரிப்பணம் ரூ.10 லட்சம் வீண்

காய்கறி மார்க்கெட் கட்டடம் திறப்பு எப்போது? : மக்கள் வரிப்பணம் ரூ.10 லட்சம் வீண்

காய்கறி மார்க்கெட் கட்டடம் திறப்பு எப்போது? : மக்கள் வரிப்பணம் ரூ.10 லட்சம் வீண்


ADDED : ஜூலை 29, 2011 01:44 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் கட்டடம் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.

வழக்கம்போல் ரோட்டிலேயே நெரிசலுடன் சந்தை நடக்கிறது. வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறத்தில் வாரச்சந்தை செவ்வாய் தோறும் நடக்கிறது. தனியார் மூலம் வியாபாரிகளிடம் ஏலம் வசூலிக்கப்படுகிறது. தவிர, போக்குவரத்து மிகுந்த மெயின்ரோட்டில் சிறு வியாபாரிகள் தினமும் கடைகளை விரித்து வியாபாரம் செய்கின்றனர். வாடிப்பட்டி, தனிச்சியம், கச்சகட்டி, சாணார்பட்டி, குலசேகரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வாடிப்பட்டி வாரச்சந்தைக்கு வருகின்றனர். இடப்பற்றாக்குறையால் கடைகளை நடத்துவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படுகிறது.புதிய காய்கறி மார்க்கெட்: நெருக்கடியை சமாளிக்க வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில், சந்தைப்பகுதியில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டடம் 12 கடைகளுடன் கட்டப்பட்டது. தவிர, மார்க்கெட் உள்பகுதியில் 70க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை நடத்திட போதுமான இடம், மேற்கூரை, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே கட்டடத்தின் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், தேர்தலை காரணம் காட்டி அப்போது கட்டடம் திறக்கப்படவில்லை. புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் கட்டடம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.



குடிமகன்கள் கும்மாளம்: காய்கறி மார்க்கெட் கட்டடம் 'குடி'மகன்கள் குடித்து கும்மாளமடிக்கும் மையமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் விபச்சாரம் நடக்கிறது. இக்கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதால் வழக்கம்போல் வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட், மெயின்ரோட்டில் வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் விபச்சாரத்திற்கு பயன்பட்டு வருவது வேதனைக்குரியது.








      Dinamalar
      Follow us