sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்

/

முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்

முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்

முதியோர் பென்ஷனுக்காக காத்திருக்கும் மூதாட்டிகள் : "கமிஷன்' பெறும் தபால்காரர்கள்


ADDED : ஜூலை 26, 2011 12:47 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : முதியோர் பென்ஷன் எப்போது வரும் என தெரியாததால், தள்ளாத வயதிலும் மூதாட்டிகள் அரசரடி தபால் அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்லும் அவலம் தொடர்கிறது.

அரசரடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வயதான பெண்கள், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்கு மேல், பலமுறை அரசரடி தபால் அலுவலகத்திற்கு செல்கின்றனர். குறிப்பிட்ட தேதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. இதனால் காலையில் தபால் அலுவலகம் திறந்தவுடன் எதிரில் உள்ள இடத்தில் அமர்ந்து கொள்கின்றனர். தள்ளாத வயதில் பஸ்சில் செல்ல வழியின்றி பெரும்பாலான பெண்கள் நடந்தே வருகின்றனர். ஆயிரம் ரூபாயில் 50 ரூபாய் பிடித்தம் செய்துவிட்டு, மீதி 950 ரூபாயைத் தான் தபால்காரர்கள் தருகின்றனர். வீட்டுக்கு வந்து கொடுத்தால் தான் 'கமிஷன்' தரவேண்டியிருக்கும் என்றெண்ணி, இங்கு வந்து வாங்கினால், இங்கும் அதே நிலை தான்.



மூதாட்டிகளிடம் கேட்டபோது, ' இந்தப் பணம் தான் எங்களை வாழவைக்குது. ஆனால் இதுக்காக அலையறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நடக்க முடியல. வர்றலேனா... பணம் கெடைக்காது. மாசக்கடைசியில தர்றத, கொஞ்சம் முன்கூட்டியே தரலாம். பணம் என்னைக்கு கிடைக்கும்னு ஒரு தேதிய சொல்லிட்டா, வயசான எங்களுக்கு அலைச்சல் குறையும். தபால்காரர் அவருக்குரிய பணத்தை எடுத்துட்டு, எங்ககிட்ட மீதிய தருவார். சிலநேரம் நாங்களா பார்த்து 20, 30 ரூபா தருவோம். ஒவ்வொரு தபால்காரரும் ஒவ்வொரு மாதிரி. ஆனா எங்க நிலைம தான் மாற மாட்டேங்குது. பிள்ளைங்கள விட்டுட்டு, எங்கயோ கெடைச்ச இடத்துல ஒதுங்கிட்டு,



முடிஞ்சளவு வீட்டு வேல செய்யற எங்கள அலைய விடாம செஞ்சா நல்லாருக்கும்,' என ஆதங்கத்தோடு தெரிவித்தனர். மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தபால்காரர்கள், முதியோர்களின் பென்ஷன் பணத்தில் 'கமிஷன்' கேட்பது தான் வேதனையாக இருக்கிறது. தபால் துறை அதிகாரிகள் இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். குறிப்பிட்ட தேதியில் பென்ஷன் பணம் கிடைக்கும் என தெரிவித்தால், தேவையற்ற அலைச்சலையும் தவிர்க்கலாம்.








      Dinamalar
      Follow us