/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு முகாம்
/
மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 02, 2011 01:20 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பேஷன் லயன்ஸ் சங்கம், சிவகாசி பட்டாஸ்நகர் லயன்ஸ் சங்கம் சார்பில், ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கண்தானம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
பள்ளி செயலாளர் செந்தில்வேலவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பட்டாஸ்நகர் லயன்ஸ் சங்க தலைவர் ராமர், செயலளர் ஞானசேகர், பொருளாளர் ஜோதிபாசு, திருப்பரங்குன்றம் பேஷன் லயன்ஸ் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ஷீலா, பொருளாளர் முத்துராமலிங்கம், பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருந்தவம், இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சுகந்தி, ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்தான மாவட்ட தலைவர் கணேசன், கண்தானத்தின் அவசியம், நன்மைகள் குறித்து பேசினார். கண்தானம் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.