sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் மேலூர் செக்கடியில் போக்குவரத்து சிக்கல்

/

ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் மேலூர் செக்கடியில் போக்குவரத்து சிக்கல்

ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் மேலூர் செக்கடியில் போக்குவரத்து சிக்கல்

ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் மேலூர் செக்கடியில் போக்குவரத்து சிக்கல்


ADDED : ஆக 02, 2011 01:20 AM

Google News

ADDED : ஆக 02, 2011 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர் : ரோட்டின் இருபுறமும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பால் மேலூர் செக்கடி பகுதியில் எப்போதும் நெரிசலாக உள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய போக்குவரத்து போலீசார் அவர்களிடம் கையேந்தி நிற்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் செயல் அத்துமீறி உள்ளது. மேலூர் பஸ் ஸ்டாண்ட், பேங்க் ரோடு, பெரியகடை வீதி, செக்கடி பகுதிகள் நெரிசல் மிக்கவை. இதில் திருச்சி ரோடு, திருவாதவூர் ரோடு, சிவகங்கை ரோடு என மூன்று ரோடுகள் பிரியும் செக்கடி பகுதி அதிக நெரிசல் மிக்கது. சிவகங்கை ரோட்டில் தினசரி மார்க்கெட் பகுதி அமைந்துள்ளதால், அதை ஒட்டியே இறைச்சி கடைகள் அதிகளவு உள்ளது. அத்துடன் மீன் கடைகாரர்களும் ரோட்டோரத்திலேயே தங்கள் கடையை விரித்துள்ளனர்.



இப் பகுதி கடைக்காரர்கள் தங்கள் கடையின் அளவை காட்டிலும் ரோட்டை அதிகமாக ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை போட்டு வைத்துள்ளனர். அத்துடன் கடைகளுக்கு வரும் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வளவு நெருக்கடி மிக்க இந்த இடத்தின் இருபுறமும் சிவகங்கை சென்று திரும்பும் பஸ்களை நிறுத்தி ஆட்களை இறக்கி, ஏற்றுகின்றனர். இதனால் ஒரு பஸ் நின்றவுடன் பின்னால் வரிசையாக வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் நிலை. அதே நேரத்தில் லாரிகளில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை இறக்கும் பணியும் நடைபெறுகிறது. இச் செயல் காலை நேரங்களில் பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் தினசரி அவதிக்குள்ளாக்குகிறது. போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய போலீசார் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களை கண்டு

கொள்வதே கிடையாது. ஒரு சிலர் அவர்களிடம் கையேந்துவதால், கடைக்காரர்கள் தைரியமாக கடையின் அளவை நீட்டித்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் உடனடியாக இதில் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, எதிர் எதிர் திசையில் ஒரே இடத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பை சற்று மாற்றி அமைக்க முன் வர வேண்டும்.








      Dinamalar
      Follow us