ADDED : ஆக 28, 2011 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் தினமலர் வாசகர் வட்டம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் சிவா, கண்ணன் முன்னிலை வகித்தனர். சங்கரா மருத்துவமனை தலைமை டாக்டர் ஆதித்யா தலைமையில் மருத்துவ குழுவினர், நோயாளிகள் 200 பேருக்கு சிசிச்சை அளித்தனர். அவர்களில் 80 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

