/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயிலை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயிலை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயிலை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயிலை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 24, 2024 05:04 AM
மதுரை: மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாட்டுத்தாவணி நக்கீரர், கே.கே.நகர் ஈ.வெ.ரா.,நுழைவு வாயில்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் ஜைனப்பீவி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாட்டுத்தாவணியில் எம்.ஜி.ஆர்.பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் (ஆர்ச்) உள்ளது. அக்குறுகிய பகுதியை கடந்து செல்வதில் சிரமம், போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது.
மாநகராட்சி எல்லை உயர்நீதிமன்றம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப நுழைவு வாயிலை வேறு இடத்திற்கு மாற்றலாம்.
மாட்டுத்தாவணியிலுள்ள பழமையான நுழைவு வாயிலை அகற்ற வேண்டும் அல்லது மாற்றியமைத்து விரிவாக்கம் செய்யக்கோரி மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கல் செய்த மனு: எம்.ஜி.ஆர்.,முதல்வராக இருந்தபோது மதுரையில் 1981 ல் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அவ்வரலாற்றை நினைவு கூரும் வகையில் மாட்டுத்தாவணி உள்ளிட்ட சில இடங்களில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டன. அதை அறியாமல் மனுதாரர் இந்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்து எனது கருத்து அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு: நக்கீரர் தோரண வாயிலை அகற்றிவிட்டு புதிதாக அதே இடத்தில் விரிவாக்கம் செய்து நிறுவ அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: உலகத் தமிழ் மாநாட்டின்போது 43 ஆண்டுகளுக்கு முன் மாட்டுத் தாவணியில் நக்கீரர், கே.கே.நகரில் ஈ.வெ.ரா.,தோரண வாயில்கள் அமைக்கப்பட்டன.
தற்போது கே.கே.நகர் முதல் ஒத்தக்கடைவரை வளர்ச்சியால் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இரு தோரண வாயில்களின் துாண்களும் ரோட்டின் மையப்பகுதிக்கு வந்துவிட்டன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
நக்கீரர் தோரண வாயிலை அகற்ற அனுமதிக்காக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மாநகராட்சி தரப்பு கூறியது. அரசு முடிவெடுக்கும்வரை காத்திருக்க இயலாது.
இரு தோரண வாயில்களையும் 6 மாதங்களில் அகற்ற வேண்டும். தேவையெனில் பெரிய அளவில் தோரண வாயில்களை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.