/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு சவால்'
/
'மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு சவால்'
'மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு சவால்'
'மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு சவால்'
ADDED : ஆக 30, 2025 04:19 AM
மதுரை: 'மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு, தி.மு.க., உள்ளிட்ட ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கான சவால்' என மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை துவக்கி வைத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.
அவர் பேசியதாவது: காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஹிந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் மலை உரிமையை மீட்க தொடர்ந்து வழக்குகளை சந்திக்கின்றனர். மதுரையில் உலக முருக பக்தர்கள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தினர். தி.மு.க.,வுக்கும், தி.க.,வுக்கும், ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கும் சவாலாக முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. தமிழகத்தின் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தின் மூலம் ஹிந்துக்களின் எழுச்சியை காட்ட வேண்டும்.இவ்வாறு பேசினார்.
காணாமல் போயுள்ளனர் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது: பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கட்சி அலுவலகத்தில் நடத்தும் தி.மு.க., தனது அறிவாலயத்தில் சிறிய பிள்ளையார் வைத்தும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து விழாவில் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தோம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கும் அழைப்பு கொடுத்தோம். அவர்கள் வரத் தயாராக இல்லை.
நம்மோடு இருக்கும் ஒரே கட்சி பா.ஜ., தான். தமிழகத்தில் அராஜகம் நடக்கிறது.
விநாயகர் மீது கை வைப்பவர்கள் காணாமல் போயுள்ளனர். முதல்வர் நீடூழி வாழவேண்டும் என வாழ்த்துகிறோம். தேர்தல் நெருங்குகிறது. நாம் அரசியல் கட்சி இல்லையென்றாலும், ஹிந்துக்களுக்கு யார் ஆதரவாக உள்ளனர் என ஆராய்ந்து ஹிந்து விரோதியை தோற்கடிக்க வேண்டும். இந்த ஆட்சியை அகற்ற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.