sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு ஆஸ்பத்திரியின் புதிய பிரிவு ஆக. 3ல் செயல்படத் துவங்கும்

/

அரசு ஆஸ்பத்திரியின் புதிய பிரிவு ஆக. 3ல் செயல்படத் துவங்கும்

அரசு ஆஸ்பத்திரியின் புதிய பிரிவு ஆக. 3ல் செயல்படத் துவங்கும்

அரசு ஆஸ்பத்திரியின் புதிய பிரிவு ஆக. 3ல் செயல்படத் துவங்கும்


ADDED : ஜூலை 28, 2011 03:37 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டடத்தை ஆக., 3ல் துவக்க திட்டமிட்டுள்ளனர்.மதுரை அரசு ஆஸ்பத்திரியின் நெரிசலை சமாளிக்க கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்டில் விரிவாக்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

300 படுக்கை வசதிகளுடன் ரூ. 28 கோடி செலவில், 1.25 லட்சம் சதுர அடியில் மூன்று மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்., 27ம் தேதி திறப்பு விழா கண்டாலும் இதுவரை இயங்காத நிலையில் உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் மதுரை வந்து கட்டடத்தை பார்வையிட்டார். டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கட்டடத்தை ஆக., 3ம் தேதி முதல் இயங்கச் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய கட்டடத்தில் உபகரணங்கள், கருவிகள், பர்னிச்சர்கள் வாங்க மத்திய, மாநில அரசுகளின் நிதி ரூ. 14 கோடி வரவேண்டியுள்ளது. இக்கட்டடத்திற்கு 560 பேர் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தேவை என புரபோசல் அனுப்பப்பட்டுள்ளது. நவீன வசதிகள், பிரமாண்ட கட்டடத்தை சும்மா வைத்திருக்க விரும்பாமல் ஆக., 3ம் தேதி பணிகள் துவங்குவது குறித்து ஆலோசிக்கவே அமைச்சர் விஜய், மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாராவுடன் மதுரை வந்து ஆஸ்பத்திரியை பார்வையிட்டுள்ளார். முதற்கட்டமாக தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் மற்றும் 100 படுக்கைகளுடன் இயங்கும். நரம்பியல் பிரிவு, எலும்பு முறிவு பிரிவுக்கு தலா 30 படுக்கை வசதிகள், பொது அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் இதர தேவைக்கு 40 படுக்கை வசதிகள் என செயல்பட உள்ளது. சில நாட்களுக்குப்பின் ஆப்பரேஷன் தியேட்டர்களும் செயல்படத் துவங்கும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி டாக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின் படிப்படியாக சில மாதங்களில் நிதியை பெற்று முழுமையாக செயல்படும் என அமைச்சர் அளவில் ஆலோசனை நடத்தியுள்ளனர். விரைவில் முழுமையாக இயங்கும்படிச் செய்தால் மெயின் பில்டிங்கில் கூட்டத்தை வெகுவாக குறைத்துவிடலாம். இதனால் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வழிபிறக்கும்.






      Dinamalar
      Follow us