நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுரியில், 'குறுங்கால நிதி - ஏழ்மையை
கட்டுப்படுத்தும் கருவி' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு
நடந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் என்.மணிமேகலை விழாவை துவக்கினார்.
மதுரை நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சங்கர நாராயணன் பேசினார். அவர்,
குறுங்கால நிதி கிடைக்கும் வழிமுறைகள் மற்றும் எந்த அளவு நிதி
வழங்கப்படுகிறது என்பதை விளக்கினார். கல்லூரி தலைவர் மகேந்திரவேல் தலைமை
வகித்தார்.