sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வு பெற்ற விவசாய துணை இயக்குனர்களுக்கு நோட்டீஸ்

/

ஓய்வு பெற்ற விவசாய துணை இயக்குனர்களுக்கு நோட்டீஸ்

ஓய்வு பெற்ற விவசாய துணை இயக்குனர்களுக்கு நோட்டீஸ்

ஓய்வு பெற்ற விவசாய துணை இயக்குனர்களுக்கு நோட்டீஸ்


ADDED : ஆக 06, 2011 03:44 AM

Google News

ADDED : ஆக 06, 2011 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:கொப்பரை தேங்காய் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வு பெற்ற விவசாய துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.தென் மாவட்டங்களில் 2001ல் நடந்த கொப்பரை தேங்காய் ஊழல் தொடர்பாக வருவாய், விவசாய மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டது.

பின், இவ்வழக்குகளை அரசு திரும்ப பெற உத்தரவிட்டது. குற்றச்சாட்டுகள் திரும்ப பெற்ற பின், சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற விவசாய துணை இயக்குனர்கள் பாரி(விருதுநகர்), ராமகிருஷ்ணன்(தேனி) மற்றும் பழனிச்சாமி(சிவகங்கை) ஆகியோர் அதை ரத்து செய்ய கோரி ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.மணிக்குமார், ''ஓய்வு பெற்ற பின் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு விவசாய துறை செயலாளர், இணை இயக்குனர் பரிந்துரை செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us