sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சென்னைக்கு கூடுதல் ரயில் தினமும் இயக்க கோரிக்கை

/

சென்னைக்கு கூடுதல் ரயில் தினமும் இயக்க கோரிக்கை

சென்னைக்கு கூடுதல் ரயில் தினமும் இயக்க கோரிக்கை

சென்னைக்கு கூடுதல் ரயில் தினமும் இயக்க கோரிக்கை


ADDED : செப் 19, 2011 12:59 AM

Google News

ADDED : செப் 19, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை-சென்னை இடையே பயணிகள் நெரிசலை தவிர்க்க தினமும் இரவில் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டது.

ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர் சையது பாபு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: மதுரை-சென்னை இடையே இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.



தீபாவளி, நவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கட் முன்பதிவு முடிந்து விட்டது. அந்தளவுக்கு பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். நெரிசலை தவிர்க்க தினமும் மதுரை-சென்னை இடையே

இரவில் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை இயக்க வேண்டும். நாகர்கோவில்-பெங்களூரு ரயிலில் இடவசதியில்லாததால், மதுரை பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மதுரை-பெங்களூருவுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். ஜோத்பூர்-சென்னை ரயிலை மதுரை வரை நீடித்தால், தென் மாவட்ட பயணிகள் வடமாநிலங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும். திண்டுக்கல்-பழநி அகல ரயில் பாதை முடியும்நிலையில் உள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து பழநி வரை ரயில்களை இயக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us