sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை

/

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை


ADDED : செப் 30, 2011 02:08 AM

Google News

ADDED : செப் 30, 2011 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊமச்சிகுளம் : அடுத்தவர் மனைவியை காதல் திருமணம் செய்த வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

மதுரை ரிசர்வ்லைன் விசாலாட்சிபுரத்தை சேர்ந்த பாலுச்சாமி மகன் தனசேகரன்,29. இவர் எஸ். ஆலங்குளம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சத்யா,24. கார்த்திகேயன் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். இதில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், கணவரை விட்டு சத்யா பிரிந்தார். சத்யாவிற்கும், தனசேகரனுக்குமிடையே காதல் ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் சத்யாவை திருமணம் செய்துக் கொண்ட தனசேகரன், விசாலாட்சிபுரத்தில் உள்ள தாயார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கார்த்திகேயனுக்கும் தனசேகரனுக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சத்யா கோயம்புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். தனசேகரன் இரவு 7.45 மணிக்கு ஆலங்குளத்தில் இருந்து டூவீலரில் வீட்டிற்கு வந்தார். மகாத்மாகாந்தி நகர் வந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள், தனசேகரனை தலை, கை போன்ற பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். தனசேகரன் அதே இடத்தில் பிணமானார்.

சத்யாவின் முதல் கணவருக்கும், இவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததால் கார்த்திகேயனும், அவரது நண்பர் பிரபாகரனும் தான் கொலை செய்திருப்பார்கள் என, சத்யா தெரிவித்தார். இதை ஆதாரமாக கொண்டு ஊமச்சிகுளம் டி.எஸ்.பி., பாண்டி மற்றும் போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.








      Dinamalar
      Follow us