sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.30 ஆயிரம் லஞ்சம் : மதுரை எஸ்.ஐ., கைது

/

ரூ.30 ஆயிரம் லஞ்சம் : மதுரை எஸ்.ஐ., கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் : மதுரை எஸ்.ஐ., கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் : மதுரை எஸ்.ஐ., கைது


ADDED : ஜன 30, 2025 10:52 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சண்முகநாதன் 35, கைது செய்யப்பட்டார்.

மதுரை எச்.எம்.எஸ்., காலனியைச் சேர்ந்தவர் கவிதா 45. இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்தபோது முன்விரோதமாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரை கைது செய்ய ஜெய்ஹிந்த்புரம் ஸ்டேஷன் எஸ்.ஐ., சண்முகநாதன் ரூ.ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார். கவிதா தயங்கியதால் ரூ.70 ஆயிரமாவது தருமாறு 3 நாட்களாக கேட்டார்.

இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் கவிதா புகார் செய்தார். நேற்று மாலை ரூ.30 ஆயிரம் தயாராக இருப்பதாக எஸ்.ஐ.,க்கு கவிதா தகவல் தெரிவித்தார். சூர்யா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சீருடை அணிந்து டூவீலரில் புறப்பட்ட எஸ்.ஐ., சண்முகநாதன், புதுார் பஸ் டெப்போ அருகே லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டு டூவீலர் 'பவுச்சில்' வைத்தபோது அவரை டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூரியகலா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவரை 'சஸ்பெண்ட்' செய்ய கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us