மதுரை மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'கீழடி அறிக்கையை காலடியில் போடாதே' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சி.சக்திவேல் தலைமை வகித்தார்.
செயலாளர் கவிஞர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் வீரஆதிசிவத் தென்னவன் பேசினார்.
கவிஞர்கள் ரவி, கல்யாணசுந்தரம், வரதராஜன், கங்காதரன், மகா முருகுபாரதி, குறளடியான், பால் பேரின்பநாதன், லிங்கம்மாள், சிவசத்யா, ஆறுமுகம், இதயத்துல்லா, பழனி, பொன்பாண்டி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கவிதை பாடினர். சக்திவேல் எழுதிய 'மகாகவி பேசுகிறேன்', பழனி எழுதிய 'எம் மொழியும் தமிழ் மொழியே' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன. சிறப்பாக கவிதை பாடிய பால் பேரின்பநாதன், சிவசத்யாவுக்கு நுால்கள் பரிசாக வழங்கப்பட்டன. துணைச்செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார்.

