ADDED : டிச 14, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 முறை இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிச. 16 முதல் ஜன. 20 வரை நடக்கிறது. 57 குழுக்கள் மூலம் 2 லட்சத்து 7000 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை வளர்ப்போர் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

