நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை இணைய வழியில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
தலைமை டாக்டர் சாந்தி தலைமையில் டாக்டர்கள் நிர்மலன், ராஜேஷ் கண்ணா, லாலாந்தி, வசந்தகுமார், சந்தோஷ்குமார் மாற்றுத்திறனாளிகளை மதிப்பீடு செய்தனர். 314 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிவேற்றம் செய்து சான்றிதழ், உபகரணங்கள் வழங்கப்பட்டன.

