ADDED : நவ 17, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் பவன்குமார், 22. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 4ம் ஆண்டு படித்தார். தல்லாகுளம் பகுதியில் வீடு எடுத்து தங்கியவர், சில நாட்களுக்கு முன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை இறந்தார். அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
தற்கொலைக்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

