ADDED : டிச 04, 2024 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கிடாரிபட்டி லதா மாதவன் கல்லுாரியுடன் காந்திய சிந்தனை கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்விக் குழுமத் தலைவர் மாதவன் முன்னிலையில் முதல்வர்கள் தேவதாஸ், முருகன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்வி அலுவலர் நடராஜன், பி.ஆர்.ஓ. பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.