sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை

/

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை


ADDED : நவ 06, 2025 05:50 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் மனநல ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கமிஷனர் சித்ரா முயற்சியில் மனநல ஆலோசகர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மையங்களில், மாணவர்களுக்கான பிரச்னை, தற்கொலை எண்ணம் தடுப்பு, தவறான பழக்க வழக்கங்களை தடுத்தல், குறைந்த மதிப்பெண்களால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது உள்ளிட்ட பல்வேறு மாணவர்களுக்கான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

இதற்காக வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை மாநகராட்சி பள்ளிகளில் மனநல நிபுணர்களை மாணவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

திங்கள் - மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள், செவ்வாய் - மணிமேகலை பெண்கள், புதன்- மறைமலை அடிகளார் ஆண்கள், வியாழன் - திரு.வி.க., வெள்ளி - இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நடக்கின்றன. ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் அனுமதியுடன் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us