ADDED : ஜன 22, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துாய்மைப் பணியில் ஈடுபட்டார்.
நேற்று காலை மதுரை வந்த அமைச்சர் முருகன் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் பிரகாரங்களில் துாய்மைப் பணியில் ஈடுபட்டார். அவருடன் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், கிருஷ்ணன், சத்யம் செந்தில்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், நிர்வாகிகள் வேல்பாண்டியன், முருகேஷ்பாண்டி, பிச்சைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.