sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி உறுதி

/

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி உறுதி

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி உறுதி

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி உறுதி


ADDED : நவ 24, 2024 04:05 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று இக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, அரிட்டாபட்டி, தும்பைபட்டி ஊராட்சி தலைவர்கள் வீரம்மாள், அயூப்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2022 தமிழ்நாட்டிலே முதல் பறவைகள் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் தற்போது டங்ஸ்டன் கனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஹிந்துஸ்தான் ஜிங்க நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தமிழக அரசு தடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் நிறைந்த மதுரை மாவட்டத்தை தமிழ் பண்பாட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒப்புதலின்றி டங்ஸ்டன் எடுக்க முடியாது. தமிழக அரசு நுாறு சதவீதம் அனுமதி தராது.

இதுதொடர்பாக யார் ஆய்வு செய்ய வந்தாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தமிழக அரசுக்கு இது குறித்து எந்த விண்ணப்பமும் வராத நிலையில் இதை பெரிதாக்க வேண்டாம் என்றார்.






      Dinamalar
      Follow us