sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் 'யாரை நம்பியும் நாங்க இல்லை' என எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி பேச்சு

/

தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் 'யாரை நம்பியும் நாங்க இல்லை' என எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி பேச்சு

தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் 'யாரை நம்பியும் நாங்க இல்லை' என எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி பேச்சு

தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வை தொடர்ந்து மதுரையில் மா.கம்யூ., உடன் முட்டல் மோதல் 'யாரை நம்பியும் நாங்க இல்லை' என எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி பேச்சு


ADDED : அக் 20, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 20, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,வுடன் ஏற்பட்ட மோதல் 'நீறு பூத்த நெருப்பாக' உள்ள நிலையில், மதுரையில் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியுடன் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது.

பட்டா விஷயத்தில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக எம்.பி., வெங்கடேசன் பேச, தொகுதி பக்கமே எம்.பி., வருவதில்லை என்ற ரீதியில் 'கண்டா வரச்சொல்லுங்க' என அமைச்சரின் தொகுதியில் எம்.பி.,க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு வெங்கடேசன் பதிலடி கொடுக்க, 'பட்டா வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை (வெங்கடேசன்) நம்ப வேண்டாம்' என மூர்த்தி கூறியது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை லோக்சபா தொகுதியை தி.மு.க., வுக்கு ஒதுக்க வேண்டும் என செயலாளர்களான மூர்த்தி, தளபதி வலியுறுத்திய நிலையில், கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைமை ஒதுக்கியது. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தளபதி எம்.எல்.ஏ., கூட்டு முயற்சியால் வெங்கடேசன் மீண்டும் வெற்றி பெற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதால் உள்ளூர் அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகளிடம் வெங்கடேசன் பட்டும் படாமலும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செப்.9ல் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் மதுரையில் துணைமுதல்வர் உதயநிதியை வைத்து 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

இதில் வெங்கடேசனும் பங்கேற்றார். இதற்கு போட்டியாக அக்.7ல் மாநகராட்சி பகுதியில் வீட்டு மனை பட்டா இல்லாதோரை தேடிப்பிடித்து நுாற்றுக்கணக்கானோருடன் கலெக்டர் அலுவலகத்தை எம்.பி.,வெங்கடேசன் முற்றுகையிட்டார். '10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தாங்க. ஆனால் மாநகராட்சி பகுதி ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமல் அரசாணை வெளியிடாம இருக்காங்க' என அமைச்சர் மூர்த்தியை மறைமுகமாக சாடினார் எம்.பி., கூட்டணி கட்சி என்பதால் தி.மு.க.,வினர் பொறுமை காத்தனர்.

'கண்டா வரச்சொல்லுங்க'


இதற்கிடையே மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட வண்டியூரில் மா.கம்யூ., கிளை மாநாடு நடந்தது. அதில் ரோடுகள் மோசமாக இருப்பதாகவும், ரேஷன் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாக இருப்பதாக கூறி தீர்மானம் நிறைவேற்றி அதை மக்கள் பார்வைக்கு பேனராக வைத்தனர். இது மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக மக்கள் பெயரில் 'கண்டா வரச் சொல்லுங்க...' என வெங்கடேசனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு பதில் அளித்த வெங்கடேசன், 'நாங்க இங்கதான் இருக்கோம். ரேஷன் கடையில் தரமான பொருள் வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது. மக்கள் போராட்டத்தில் நாங்கள் பின்வாங்கமாட்டோம்' என ஒருமையில் எச்சரித்தார்.

நம்பி ஏமாற வேண்டாம்


இந்நிலையில் நேற்று மதுரை ஆலாத்துாரில் நடந்த தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:

மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் பட்டா வழங்க இருக்கிறார்கள். இதில் எவனும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து 'பட்டா கொடுக்கிறேன்' எனச் சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள். தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரசாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதல்வர் செய்துவருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. கிடைக்காததை கிடைக்கும் என்றும் வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவுகூர்ந்து நீங்கள் நம்பி ஏமாந்து விட வேண்டாம்.

முதல்வர் சொன்னதைப்போல யாரை நம்பியும் நாம் இல்லை. நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருப்பதுதான் தி.மு.க.,

இவ்வாறு பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து மா.கம்யூ., கட்சியும் தி.மு.க.,வுடன் முரண்டு பிடித்து வருகிறது. இரு கட்சியினரும் ஒருமையில் சவால் விட்டு பேசிவருகின்றனர். இது கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இருதரப்பையும் சமரசம் செய்யும் முயற்சியில் இருகட்சிகளின் தலைமையும் இறங்கியுள்ளன.






      Dinamalar
      Follow us