sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதிகாரிகளை கடிந்த அமைச்சர்

/

 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதிகாரிகளை கடிந்த அமைச்சர்

 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதிகாரிகளை கடிந்த அமைச்சர்

 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதிகாரிகளை கடிந்த அமைச்சர்


ADDED : நவ 23, 2025 04:04 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். பாலை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளிடம் குறை, தேவைகளை கேட்டறிந்தார்.

14 உறுப்பினர்களுக்கு கடன் தொகைக்கான காசோலை வழங்கியபோது 'தினமும் எத்தனை லிட்டர் தருகிறீர்கள்; விலை என்ன' எனக் கேட்டபோது விவசாயிகள் பதில் கூற தடுமாறினர்.

பின்னர், கடந்த 2 நாட்களாக மட்டுமே பாலின் தரம் ஆய்வு செய்து ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதாக விவசாயிகள் கூறியதை அடுத்து அதிகாரிகளை அமைச்சர் கடிந்தார்.

'தினமும் கருவியில் பாலின் தரத்தை ஆய்வு செய்து உரிய சீட்டு, விலை வழங்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.

பின் குலசேகரன்கோட்டை பகுதி விவசாயிகளின் மாட்டு பண்ணைக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பொங்கலுக்கும் ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். துறை கூடுதல் கமிஷனர் பிரமிளா, பொது மேலாளர் சிவகாமி, துணை பொது மேலாளர் முகமது ரபிக், உதவி பொது மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us