/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலைபேசி
/
சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலைபேசி
சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலைபேசி
சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலைபேசி
ADDED : மார் 15, 2026 06:05 AM

மதுரை: சமூக நலத்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் 2000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு அலைபேசிகளை மதுரையில் அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
அவர் பேசுகையில், 'நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வெற்றிகரமாக நடக்க அங்கன்வாடி பணியாளர்களின் சேவை மகத்தானது. கொரோனா காலகட்டத்தில் மக்களை பாதுகாக்க நீங்கள் செய்த சேவையை மறக்க முடியாது' என்றார்.
கலெக்டர் பிரவீன்குமார் பேசுகையில், 'அங்கன்வாடி பணியாளர்கள் திட்டப் பணியை மேலும் திறம்பட மேற்கொள்ள அலைபேசிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தாய் மற்றும் குழந்தைகளின் விபரங்களை 'போஷன் ட்ராக்கர்' செயலியில் பதிவு செய்து, சேவைகளை கண்காணிக்க முடியும். கர்ப்பிணிகளின் கர்ப்ப காலம் முதல் குழந்தை பிறப்புவரை ஊட்டச்சத்து, இணை உணவு வழங்குவதில் இப்பணியாளர்களின் பங்கு முக்கியமானது' என்றார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணி திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி, மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி பங்கேற்றனர்.

