ADDED : அக் 18, 2024 05:31 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பருவமழையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலையில் வைக்க வேண்டிய உபகரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொட்டாம்பட்டி பி.டி.ஓ., ஜெயபாலன், வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர் பிரபு, வருவாய் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
