ADDED : நவ 11, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி லட்சுமிபுரம் டாஸ்மாக் கடை எதிரே புதர் மண்டிய காட்டுப் பகுதியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. அவரது உடல் அருகே மதுபாட்டில்கள், பீடி துண்டுகளும், டூவீலரும் கிடந்தன.
உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேற்கண்ட நபர் யார், முன்விரோதத்தால் நடந்த கொலையா என சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.