sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேசிய பாட்மின்டன் போட்டி

/

தேசிய பாட்மின்டன் போட்டி

தேசிய பாட்மின்டன் போட்டி

தேசிய பாட்மின்டன் போட்டி


ADDED : அக் 31, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தேசிய அளவிலான யோனெக்ஸ் சன்ரைஸ் ஜூனியர் ரேங்கிங் (19 வயதுக்குட்பட்டோர்) ஆடவர், மகளிர் பிரிவு பாட்மின்டன் போட்டிகள் மதுரையில் நடந்தன.

மதுரை மாவட்ட பாட்மின்டன் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் ஏற்பாடுகளை செய்தன.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1016 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 பிரிவுகளின் கீழ் நடந்த இறுதிப்போட்டி முடிவுகள்:

மகளிர் ஒற்றையர் பிரிவில் ராஜஸ்தானின் பாருல் சவுத்ரி 21 - 17, 21 - 10 செட்களில் மேற்குவங்கத்தின் கனிஷ்கா பிஜர்னியாவை வீழ்த்தினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் அனன்யா, அஞ்சனா மணிகண்டன் ஜோடி 21 - 15, 19 - 21, 21 - 13 செட்களில் ஆந்திராவின் துர்கா இஷா கண்ட்ரூ, டில்லியின் இஷிட்டா நேகி ஜோடியை வீழ்த்தினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் அபிநவ் கார்க் 21 - 11, 21 - 11 செட்களில் ஆந்திராவின் பால பிரணாய் பிரகடாவை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் தெலுங்கானாவின் அமன் அனீஷ், கேரளாவின் ஆதீஷ் ஸ்ரீனீவாஸ் ஜோடி 21 - 17, 21 - 10 செட்களில் தெலுங்கானாவின் சவுர்யா கிரண், ஆந்திராவின் பாலா பிரணாய் பிரகடா ஜோடியை வீழ்த்தினர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் புதுச்சேரி மிதிலேஷ் கிருஷ்ணன், தமிழகத்தின் வர்ணா பிரபுஆனந்த் ஜோடி போட்டியாளர் வராததால் முதலிடம் பெற்றனர்.

மதுரை பாவோஸ் அகாடமியில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பாட்மின்டன் சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இந்திய பாட்மின்டன் சங்க (பி.ஏ.ஐ.,) செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, சங்க மாநில செயலாளர் அருணாச்சலம், மதுரை மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி ரூ.8 லட்சம் வரையான பரிசுத்தொகை வழங்கினர்.






      Dinamalar
      Follow us